மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது.

ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி. இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இன்றும்கூட, கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications