அடக்கொடுமையே! தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!!
இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தக்காளி திருட்டை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பருவமழை பொய்த்துப்போனதால் தாக்காளி விலைச்சல் குறைந்து விட்டது. இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளது. விளைச்சல் இல்லாததால் தக்காளியின் வரத்தும் குறைந்துகொண்டே இருப்பதால், தக்காளியின் விலை நாளுக்கு நாள் விண்ணெய் முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதமடித்தது தக்காளி விலை. சில்லறை கடைகளில் கிலோ ரூ.120க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. அங்கு தக்காளி கிலோ ரூ 100-ல் இருந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது.
இதனால் மார்க்கெட்டில் விற்கும் சில வியாபாரிகள் போலீசாரின் தகுந்த பாதுகாப்போடு தக்காளியை விற்பனை செய்கிறார்கள். தக்காளி திருடு போகாமல் தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சில கடைகளில் தனியார் பாதுகாவலர்களையும் பாதுகாப்பு பணியில் நிறுத்தி உள்ளனர்.
Madhya Pradesh: Men with arms guard tomatoes at Indore vegetable market due to fear of them being stolen as prices soar. pic.twitter.com/czyCAPRcqE
— ANI (@ANI_news) July 22, 2017
இதனிடையே கடந்த 20ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை தஹிசர் பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் இருந்து 300 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தக்காளியை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் தக்காளி திருடுபோகாமல் இருக்க அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications