பொது மக்கள் கவலைபட வேண்டாம்... ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பு உள்ளது: அருண் ஜேட்லி
ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளதால் பொது மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளதாகவும், அதனை படிப்படியாக புழக்கத்தில் விட்டு வருவதால், டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30 -ம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே டிசம்பர் 30ம் தேதி வரை நாட்டில் பணத் தட்டுப்பாடு நிலவும் என்றும், பின்னர் அது படிப்படியாக நீங்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளதாகவும் அதனை படிப்படியாக புழக்கத்தில் விட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், டிசம்பர் 30ம் தேதிக்குப் பின்னர் சீரான பணப்புழக்கம் நடைபெற தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, நிதியமைச்சகமும் மேற்கொண்டுள்ளது.
அத்துடன் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கையிருப்பிலும் போதிய பணம் உள்ளதால், நாடு முழுவதும் தற்போது அதனை விநியோகம் செய்து வருகிறோம். எனவே, பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications