விவசாயிகளை பாம்புக் கறியை தின்ன வைத்ததுதான் மோடியின் சாதனை… அய்யாகண்ணு வேதனை
பாம்புக் கறியை விவசாயிகளை தின்ன வைத்ததுதான் பிரதமர் மோடியின் சாதனை என்று வேதனை தெரிவித்துள்ளார் விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு.
டெல்லி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் 16வது நாளான இன்று அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகள் ஒரு தூசி
16வது நாளாக நாங்கள் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. எங்களை ஒரு தூசியாக மத்திய அரசு நினைக்கிறது. பிரதமர் மோடியும் அப்படித்தான் நினைக்கிறார். நாங்கள் என்ன செய்வது?

மோடியின் சாதனை
தமிழ்நாட்டில் விளைச்சல் இல்லை. சோற்றுக்கே வழியில்லை. பாம்புக் கறி தின்னுவதற்கு எங்களை விட்டிருக்கிறது இந்த அரசு. இதுதான் எங்களின் இன்றைய நிலை. இதுதான் இந்த அரசின் சாதனை

ஊருக்கு போய்..
அதே போன்று இங்கு உண்ணாவிரதம் இருக்கும் விவசாயின் மனைவி பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மரணம் அடைந்துவிட்டார். இனி நான் ஊருக்கு போய் என்ன செய்யப் போகிறேன் என்று கூறி உண்ணாவிரதத்தில் விவசாயி ஈடுபட்டுள்ளார்.

நிமிடத்தில் தள்ளுபடி
கடன் தள்ளுபடியை உடனடியாக ஒரே நிமிடத்தில் நிறைவேற்றி விடலாம். ஆனால், அதனை மத்திய அரசு செய்ய மறுக்கிறது. மோடி நினைத்தால் இதனை செய்யலாம். அதே போன்று வறட்சி நிவாரணத்தை உடனடியாக கொடுக்க முடியும். நதி நீர் இணைப்பிற்கு பணத்தை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மோடி மறுப்பு
எங்களை சந்திக்கவே மறுக்கிறார் மோடி. இந்த நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி எங்களைப் பார்த்து 15 நிமிடங்கள் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்களிடம் பேச வேண்டியவர் எங்களிடம் பேச மாட்டேன் என்கிறார். அதுதான் எங்கள் கவலை.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications