இலங்கை பிரதமர் ரணிலுடன் சுஷ்மா சந்திப்பு! இருநாட்டு கூட்டு ஆணைய கூட்டத்திலும் பங்கேற்பு!!
டெல்லி/கொழும்பு: இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். கொழும்பில் ந்டைபெற்ற 9-வது இலங்கை- இந்தியா கூட்டு ஆணைய கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்றார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பகலில் கொழும்பு சென்றடைந்த அவர், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
A warm welcome by a close neighbour.
— Vikas Swarup (@MEAIndia) February 5, 2016
EAM @SushmaSwaraj calls on PM Ranil Wickremesinghe at Temple Trees pic.twitter.com/Hqj8ITmdq9
இதன் பின்னர் இலங்கை- இந்தியா இடையேயான 9-வது கூட்டு ஆணைய கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டார். இதில் இருதரப்பு வர்த்தக உறவுகள், புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
Reviewing a multi faceted partnership. EAM @SushmaSwaraj & FM Samaraweera Co-Chair 9th India-Sri Lanka Jt Commission pic.twitter.com/KdTlFZvaw6
— Vikas Swarup (@MEAIndia) February 5, 2016
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் சுஷ்மா சந்தித்து பேசுகிறார்.
இச்சந்திப்புகளின் போது இருநாட்டு நல்லுறவு, தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். மேலும் சுஷ்மா ஸ்வராஜ் நாளை யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் இந்த பயணம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்துக்கு செல்வாரா என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.
முன்னதாக புதிய ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இயற்கை வளங்களை இந்தியா கொள்ளையடிக்கப் போவதாக ராஜபக்சே ஆட்சிக் காலத்து வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ், சுஷ்மா ஸ்வராஜின் வருகை குறித்து கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
2022 நிலைமைக்கு போகும் இலங்கை! எல்லாத்துக்கும் இந்த டிரம்ப்தான் காரணம்! மோசமாகும் நிலைமை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications