காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது: மத்திய அரசு மீண்டும் வாதம்
டெல்லி: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று மதியம் விசாரிக்கப்பட்டது.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாதம் நடைபெற்றது. வாதத்தை முன் வைத்த மத்திய அரசின், ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசுக்கு மட்டுமே உரிமையுள்ளதாக அவர் வாதிட்டார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இரு நாட்களாக, திமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரால், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், மத்திய அரசு, தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றமே முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டும், முதலில் அதை ஏற்ற மத்திய அரசு 3 நாளில், பல்டியடித்து, மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இப்போது மீண்டும் அதே பல்லவியை மத்திய அரசு பாடியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில், தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications