பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவது ஏன்?
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரும் தனி நபர் மசோதாவை ஆதரித்தால் ராஜ்ய உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என்று இந்தியா கருதுகிறது.
டெல்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை இந்திய அரசு எதிர்க்கப் போவதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத எதிர்ப்பு என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் பிப். 3-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.

பொருளாதார தடை
அதில் அவர் குறிப்பிடுகையில், பயங்கரவாதத்தை வேரறுக்காத பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடையும், அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது போக்குவரத்துத் தடையும் விதிக்க வேண்டும். அதோடு அந்நாடுகளை பயங்கரவாத நாடுகளாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும் இந்த மசோதாவானது வரும் மார்ச் மாதம் 9-ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜெனீவா ஒப்பந்தம்
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின் படி உள்ள ராஜ்ய உறவுகளை பாதிக்கும் என்று இந்திய அரசு கருதுகிறது. எனவே அதுகுறித்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக உறவு
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிப்பது சரியன்று என்று தெரிவிக்கின்றன.

சட்டம் தேவையா?
அந்த மசோதாவை பாராளுமன்ற அவைக் குழுவினர் பரிந்துரைத்தால் அது சட்டமாக இயற்றப்படும். பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு வேளை அதிகளவிலான உறுப்பினர்கள் ஆதரித்தால் அந்த மசோதா சட்டமாக உருவெடுக்கும்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications