தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் பெரும் போராட்டம்.. காவிரி அமைப்பு தலைவர் எச்சரிக்கை
மண்டியா: உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என்று காவிரி ஹித ரக்ஷனா வேதிகே (காவிரி நல அமைப்பு) தலைவர் மாதேகவுடா, கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு தலா 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இதுகுறித்து மாதேகவுடா, மண்டியாவில் நிருபர்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது. ஆட்சியை இழந்தாலும் தமிழகத்துக்கு சித்தராமையா அரசு, தண்ணீர் திறக்க கூடாது. இதையும் மீறி தண்ணீர் திறந்துவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
சிறப்பு சட்டசபை கூட்டம் எடுத்த முடிவுக்கு முதல்வர் கட்டுப்பட வேண்டும். மாநில மக்கள் சித்தராமையா அரசுக்கு பக்க பலமாக இருப்போம் என்றார் அவர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications