எல்லையில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது - மனோகர் பாரிக்கர்
பானாஜி: எல்லையில் தாக்குதலை நிறுத்தக் கோரி பாகிஸ்தான், இந்தியாவிடம் கெஞ்சியதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே உள்ள மாச்சல் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கோவா மாநிலம் அல்டோனா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த விஜய் சங்கல்ப் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசுகையில், இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் கடுமையாக இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்கு அழைப்பு வந்தது. இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கெஞ்சினார்கள். எல்லையில் தாக்குதல் நடத்துவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. தாக்குதல் கூடாது என்றே விரும்புகிறோம். அதேசமயம், எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தானும் நிறுத்த வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தினோம். இதைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக எல்லையில் அத்துமீறல் நின்றுள்ளது. எல்லையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications