For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் பதிப்பை தொடங்கிய தினத்தந்தி நாளிதழ்! துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Dailythanthi news paper starts its new edition in Dubai
துபாய்: தினத்தந்தி நாளிதழ் துபாய் நகரில் தனது புதிய பதிப்பை துவங்க உள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை அந்த நாளிதழ் பெற்றுள்ளது,.

முன்னணி தமிழ் நாளிதழான தினத்தந்தி ஏற்கனவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை ஆகிய 16 நகரங்களில் இருந்து வெளி வருகிறது. 17வது பதிப்பு துபாய் நகரில் தொடங்கப்படுகிறது.

அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, உம் அல் குவைன், நாசல் கைமா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தினத்தந்தி நாளிதழ் துபாயில் பதிப்பை ஆரம்பிக்க உள்ளது. துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையும் இதன் மூலம் அப்பத்திரிகைக்கு கிடைக்க உள்ளது.

இதற்கான தொடக்கவிழா துபாய் அல்கூஸ் தொழில்பேட்டை பகுதியிலுள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் இன்று நடக்கிறது. தினத்தந்தி துபாய் பதிப்பின் இதழ், நாளை புதன்கிழமை முதல் வெளியாகிறது.

English summary
Dailythanthi news paper will start its new edition in Dubai on tomorrow. Dailythanthi will be the first Tamil news paper to be printed in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X