மோடி வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே வீழ்ந்தார் - மைத்ரிபால வெற்றி!!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால சிறிசேன சுமார் 4 லட்சத்து 49 ஆயிரத்து 72 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மைத்ரிபாலவுக்கு 51.28%; ராஜபக்சேவுக்கு 47.58% வாக்குகள் கிடைத்துள்ளன.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சே வெற்றிலை சின்னத்திலும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறிசேன அன்னம் சின்னத்திலும் போட்டியிட்டனர். இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் 72% வாக்குகள் பதிவாகின.

இத்தேர்தலில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டன.
முதல் கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன.
மைத்ரிபால சிறிசேனவுக்கு மிக அதிக அளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரிபால சிறிசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறிவிட்டார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மலையகத்தில் கண்டி, நுவரெலிய, பதுளை மாவட்டங்களிலும், அனுராதபுர, பொலன்னறுவ மாவட்டங்களிலும் மைத்திரிபாலவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
சிங்களர் பெரும்பான்மையினராக இருக்கும் அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல,காலி, ரத்தினபுரியில், மகிந்த ராஜபக்சேவின் கை ஓங்கி இருந்தது.
அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப் பிரியா, அதிபர் தேர்தலில் 51.28% வாக்குகள் பெற்று அதிகாரப்பூர்வமாக மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தார்.
வாக்கு விவரம்:
மைத்ரிபால சிறிசேன: 62,17,162 - 51. 28%
மகிந்த ராஜபக்சே: 57,68,090 - 47.58%
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications