For Daily Alerts
Just In
கட்டாய ஆட்சேர்ப்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் இசைக் கல்லூரி பொறுப்பாளருக்கு ஆயுள் தண்டனை
கட்டாய ஆட்சேர்ப்பு வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இசைக் கல்லூரி பொறுப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கட்டாயமாக ஆட்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் புலிகளின் இசைக் கல்லூரி பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ அரசாங்கத்தை பிரபாகரன் நடத்திய காலத்தில் இசைக் கல்லூரியும் நடத்தப்பட்டது. இந்த கல்லூரியின் பொறுப்பாளராக இருந்தவர் கண்ணதாசன்.
இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார் கண்ணதாசன். பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதனிடையே கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது பிள்ளை ஒருவரை கண்ணதாசன் புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்த்துவிட்டார் என வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
Comments
English summary
Srilanka's Vavuniya Court has pronounced the life sentence to LTTE Senior leader Kannadasan.
Story first published: Tuesday, July 25, 2017, 21:40 [IST]