மீண்டும் போராட்டக் களமாகும் நெடுவாசல்.. நாளை 100 கிராம மக்கள் திரள்கிறார்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நெடுவாசல் கிராமத்தில் கூடி போராட முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் கிராமத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நாளை முதல் போராட முடிவு செய்துள்ளதால் நாளை முதல் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாறவுள்ளது.
இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடக பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த ஜெம் லாபரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
22 நாள்கள் இதுதொடர்பாக போராடிய மக்களிடம் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு ஒப்பந்தம்
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ஆம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த 32 வகையான அனுமதிகளை அந்த நிறுவனங்கள் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

அனுமதிக்க மாட்டோம்
இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெறவைத்துவிட்டு மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில் நெடுவாசல் போராட்டக் குழுவினரோ, மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தங்கள் உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட அள்ள விடமாட்டோம் என்றனர்.

தமிழகம் வஞ்சிப்பு
இந்நிலையில் விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை என தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று போராடியும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

நாளை போராட்டம்?
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக் கோரி நாளை 6-ஆம் தேதி 100 கிராமத்தினர் போராட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாற உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications