கிராமங்களில் வசிக்கும் 67 கோடி பேரின் ஒருநாள் வருவாய் ரூ.33 தான்!
சென்னை: இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் 67 கோடி பேர் தினமும் 33 ரூபாய் வருவாயில் வாழ்க்கை நடத்துவது சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பு 2011ன் விவரங்களின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் 75 சதவீதம் பேரின் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்தை விட குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 69 சதவீதம் பேர் அதாவது 83.3 கோடி மக்கள் கிராமப்புறங்களில் வசித்து வருகிறார்கள்.
5 கோடி இந்திய மக்களிடம் செல்போனோ அல்லது வேறு வகையான தொலைதொடர்பு சாதனமோ இல்லை.

கிராமப்புறங்கள்
கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பதால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் முடங்கும் அபாயம் உள்ளது என்று மூடிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய்
இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் 75 சதவீதம் பேர் அதாவது 13 கோடியே 35 லட்சம் பேரின் மாத வருவாய் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

ஏழைகள்
கிராமப்புறங்களில் உள்ள 4ல் 3 வீடுகளில் மாத வருவாய் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. 90 சதவீத வீடுகளில் மாத வருவாய் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார். அர்ஜுன் சென்குப்தா கமிட்டி அளித்த அறிக்கையின்படி இந்திய மக்கள்தொகையில் 77 சதவீதம் பேர் ஏழைகள் ஆவர்.

ரூ.33 வருவாய்
கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிப்போரில் 67 கோடி பேர் தினமும் ரூ.33 வருவாயில் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

செல்போன்கள்
கிராமப்புறங்களில் வசிப்போரில் 71 சதவீதம் பேரிடம் செல்போன்கள், 11 சதவீதம் பேரிடம் குளிர்சாதனப் பெட்டிகள், 21 சதவீதம் பேரிடம் இருசக்கர அல்லது மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன.

வீடு
கிராமப்புறக்களில் 2 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 330 பேரின் வீடுகள் மூங்கில், குடிசை வீடுகள் ஆகும். 10 லட்சத்து 86 ஆயிரத்து 543 பேரின் வீடுகள் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் கவர்களால் ஆனது. 65 லட்சத்து 27 ஆயிரத்து 690 பேரின் வீடுகள் தான் கான்கிரீட் வீடுகள் ஆகும்.

கல்வி
இந்தோனேசிய மக்கள்தொகையை விட அதிகமான இந்திய மக்கள் படிப்பறிவில்லாதவர்களாக உள்ளனர். கிராமப்புறங்களில் வசிப்போரில் 74 சதவீதம் பேரின் மாத வருவாய் ரூ. 5 ஆயிரத்தை விட குறைவாக இருக்கையில் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது இல்லை.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications