விருத்தாச்சலம் சம்பவம்... ஜெ. மீது வழக்குப்பதிவு செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை
சென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.
விருத்தாச்சலத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் வெளியேற முற்பட்ட போது நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், கடலுார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் வந்த தொண்டர்கள், காலை முதல், சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கிய சற்று நேரத்தில், வெயில் கொடுமை காரணமாக சிலர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, கூட்டத்திலிருந்து மக்கள் வெளியேற முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது என்று தெரிகிறது. மேலும் அதில் 15க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவத்தினால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்ததால் மயக்கம் அடைந்தவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பின் ஒரு வழியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களில் சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகர டேவிட், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இறந்தனர்.
மக்களை மதிக்காமல் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வைத்து எந்த வித மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதியையும் செய்யாமல் இருப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் ஜெயலலிதா போகும் இடங்களில் நடக்கிறது. இதுபோன்ற கூட்டத்தில் போலீசாரின் கவனம் முழுவதும் ஜெயலலிதாவை கவனிப்பதிலேயே குவிகிறது. எனவேதான் மக்களை கண்காணிப்பதில் கவனச்சிதறல் ஏற்பட்டு இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்க்கு மாநில முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் ஆம் ஆத்மி கோரிக்கை வைக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications