"யோவ் முதல்வரே...உன் தொகுதியா நாங்க... ஒழுங்கா வேலை குடு”- பென்னாகரத்தில் அன்புமணி பிரச்சாரம்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தால் டேய் நாங்க முதல்வர் தொகுதி வேலை கொடுடா என்று உரிமையோடு கேட்கலாம் என்னிடம் என்று பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி, தான் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், "யோசித்துப்பாருங்கள், உங்கள் தொகுதியில் போட்டியிடுவது முதல்வர் வேட்பாளர். இதுவரை எந்த முதல்வராவது இந்த தொகுதிக்கு வந்திருக்கிறார்களா? இல்லை.
உங்கள் கையில்தான் தமிழகத்தின் எதிர்காலமே இருக்கிறது. இரண்டாவது முறையாக வாய்ப்புக்கேட்டு வந்துள்ளேன். முதல்முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வந்தேன். என்னை வெற்றி பெற வைத்தீர்கள். பென்னாகரம் தொகுதியில் ஒரு கிராமம் கூட விடாமல் அத்தனை கிராமங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்திருக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் ஒரு சில பகுதிகளுக்கே செய்ய முடியும். ஆனால் முதல்வராகிவிட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் செய்யலாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் பார்த்தீர்களா..? எத்தனை சாலைகள், எத்தனை கோடி திட்டங்கள். ஸ்ரீரங்கம் என்ன, அதைவிட பிரம்மிக்கத்தக்க வகையில் பென்னாகரத்தை மாற்றுவேன்.
நீங்களெல்லாம் "டேய் முதல்வரே எங்க தொகுதிடா.. வேலைய கொடுடா" னு உரிமையோட கேட்கலாம்" என்றதுடன் "நாம் செய்யவிருக்கும் திட்டங்களைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், நாம் மகத்தான வெற்றிபெற வேண்டும்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications