Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி மறுத்து தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Baning private law college start up, Chennai HC stuck down the law

"விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக சட்டக்கல்லூரி தொடங்க கடந்த 2008ம் ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டருந்தது. 2014ம் ஆண்டு தமிழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்று சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மகாதேவன் அமர்வு ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்ற சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+