திருப்பூர்: அரபி படிக்காத சிறுவனுக்கு சூடு; பள்ளி நிர்வாகி கைது!
திருப்பூர்: திருப்பூரில் அதிகாலை எழுந்து அரபி படிக்காத சிறுவனை அயன்பாக்சில் சூடு வைத்த பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர் தனது 6 வயது மகன் இப்ராஹீமை, அரபு மொழி கற்பதற்காக அக்ஹாரபுதூரில் உள்ள மதரசா பள்ளியில் சேர்த்துள்ளார். அப்துல் ஹக்கீம் தனது மகனை பார்க்க பள்ளிக்கு சென்றபோது பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீத், இப்ராஹீமை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதில் சந்தேகமடைந்த அப்துல் ஹக்கீம், தனது மகனை பார்க்காமல் செல்ல முடியாது என்று சொல்லவே இப்ராஹீமை பார்க்க அனுமதித்துள்ளார் பள்ளி நிர்வாகி. அப்போது, இப்ராஹீம் உடம்பில் பல பகுதிகளில் தீ காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்துல் ஹக்கீம்.
இதையடுத்து, தனது மகனை உடனடியாக அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும், இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் அப்துல் ஹக்கீம் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து மதரசா பள்ளி நிர்வாகி ஷேக் பரீத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், ''சிறுவன் இப்ராஹீம் அதிகாலையில் எழுந்து படிக்கவில்லை என்பதாலும், குறும்பு செய்ததாலும் உடம்பில் அயன்பாக்ஸ் மூலம் சூடு வைத்ததாக ஷேக் பரீத்" கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் ஷேக் பரீத்தை கைது செய்து திருப்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஷேக் பரீத்திடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி நிர்வாகியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications