திருச்சி ஈழத் தமிழர் சிறப்பு முகாம் முற்றுகை.. ஆயிரக்கணக்கானோருடன் வேல்முருகன் கைது!
திருச்சி: தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 1,252 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை முன் திரண்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை. காவேரி, மே.ப. காமராஜ், 36 பெண்கள் உள்பட 1,252 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அங்கிருந்து ஏரளமான ஈழ தமிழர்கள், தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர். அதில் சிலர் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக கூறி, கைது செய்யப்பட்டு, தமிழக சிறைகளிலுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் உள்ள ஈழ தமிழர்களை உடனே விடுதலை செய்து, அவர்கள் விரும்பு நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்றார்.

கெட்டவார்த்தையில் திட்டிய அதிகாரி
இந்த போராட்டத்தின் போது காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர்,முன்னாள் எம்.எல்.ஏ.வை.காவேரியை பார்த்து ஹிந்தியில் மொழியில் கெட்டவார்த்தையில் திட்டினார்.
இதனால் வாழ்வுரிமை கட்சியினருக்கும், துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூருக்கும் இடையே பயங்கர வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து உதவி ஆணையர் அருள்அமரன் அவர்களை சமதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications