இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கைலுக்கி தமிழக மீனவரை படுகொலை செய்த சிங்கள சிறிசேனா!
இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கைலுக்கி நட்பு பாராட்டிய சிங்கள சிறிசேனாவின் ஆட்சியில்தான் தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அநீதி அரங்கேறியுள்ளது.
ராமேஸ்வரம்: எங்கள் நட்புநாடு என இந்திய தலைவர்களுடன் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொள்ளும் சிங்கள சிறிசேனாதான் இப்போது அப்பாவி தமிழக மீனவரின் உயிரை கோரமாக குடித்திருக்கிற கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். சிறிசேன இலங்கை அதிபரான பின்னர் நடந்தேறிய முதலாவது தமிழக மீனவர் படுகொலை இது.
இலங்கை அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா குமராதுங்க, ராஜபக்சே ஆட்சிக் காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு உடந்தை என காரணம் காட்டி நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யபப்ட்டனர். இதுவரை 800-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அத்தியாயம் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த கொடூரம் தொடர்ந்தது. 2011-ம் ஆண்டு சிங்கள கடற்படை நடத்திய கொடூர தாக்குதலில் காரைக்காலை சேர்ந்த 4 மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

தாக்குதல்கள் ஓயவில்லை
இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சிறிசேன அதிபரானார். ஆனாலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஓய்ந்ததாக இல்லை.

படகுகள் சிறைபிடிப்பு
இதுவரை இல்லாத வகையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை கைப்பற்றி சிறைபிடித்து வைக்கும் நடைமுறையை சிறிசேன அரசு கடைபிடித்தது. இது தமிழக மீனவர்களின் பொருளாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதல்.

மீனவர் படுகொலை
ஆனால் இந்திய மத்திய அரசோ இதுவரை சிங்கள சிறிசேன அரசை தட்டிக் கேட்காமல் நட்பு நாடு எனக் கூறிக் கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி, ஆயுத உதவி வழங்குகிறது. இப்போது இந்தியா கொடுத்த ஆயுதங்களைக் கொண்டே இந்திய குடிமகனாகிய மீனவரை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது சிங்கள சிறிசேன.

என்ன செய்யும் இந்திய பேரரசு
ஒருபுறம் இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கை குலுக்கிய சிங்கள சிறிசேனா இதோ இப்போது தமிழக மீனவரின் உயிரை குடித்திருக்கிறார்... இந்திய மத்திய பேரரசு என்னதான் செய்யப் போகிறது?
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications