முடிவுக்கு வந்தது கமல்ஹாசனுடனான லிவிங் டூ கெதர் வாழ்க்கை- நடிகை கவுதமி பகிரங்க அறிவிப்பு!
13 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமலஹாசனும், நடிகை கௌதமி இருவரும் கடந்த 13 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக கௌதமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகள் சுப்புலட்சுமி எதிர்காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக தெரிவித்துள்ளார். மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்.
Heartbroken to have to share...Life and decisions https://t.co/HPXPUKwPGA via @wordpressdotcom
— Gautami (@gautamitads) November 1, 2016
மிகுந்த கவலையுடன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கௌதமி தெரிவித்துள்ளார்.
வட இந்திய தொழிலதிபர் சந்தீப் என்பவரை திருமணம் செய்து பின் விவகாரத்து பெற்றார். இந்த விவகாரத்துக்குப் பின்ன் கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கவுதமி. இருவரும் கடைசியாக பாபநாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.