டாஸ்மாக்கில் அலை மோதும் கூட்டம்… நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் ‘குடிமக்கள்’ அவதி
நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை உச்சநீதிமன்றத்தில் உத்தரவுப்படி மூடப்பட்டது. இதனால் திறந்திருக்கும் சில டாஸ்மாக் கடைகளில் ‘குடிமக்கள்’கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை: நெடுஞ்சாலைகளில் மதுக்கடை மூடப்பட்டதால் மற்ற மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும், சுமார் 3 ஆயிரத்து 400 கடைகள் செயல்பட்டு வந்தன.

மதுக்கடை மூடல்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவை அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. இதனால் குடிமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். டாஸ்மாக் கடைகள் எங்கு திறந்திருக்கின்றதோ அங்கு மது வாங்க குவிந்து வருகின்றனர்.

அலைமோதும் கூட்டம்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி செல்கின்றனர் குடி பிரியர்கள்.

போக்குவரத்து நெரிசல்
இருக்கும் சில கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் கூட்டம் அதிக அளவில் கூடியும் மதுபாட்டில்களை வாங்கப்படுவதால் அந்த இடத்தில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் அப்பகுதியில் வசிப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், பெரிய அளவில் தமிழக அரசிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க நெடுஞ்சாலைகள் அல்லாத பிற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு தேர்ந்தெடுக்கும் இடங்களில் வசிக்கும் பெண்கள் பெருமளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications