நாங்குநேரி தொழில்நுட்ப மண்டலத்திற்கு வந்த ஜப்பான் முதலீட்டாளர்கள்
நெல்லை: நாங்குநேரியில் உள்ள பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஜப்பான் நாட்டின் முதலிட்டாளர்கள் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டததில் நாங்குநேரி சிறப்பு தொழில் நுட்ப மண்டலத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 1998ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக சுமார் 3500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் அப்போதைய தொழில் துறை அமைச்சர் முரசோலி மாறன் இப்பகுதியை தடையில்லா வர்த்தக மணடலமாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து மத்திய அரசு இதனை 31.3.2001ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் இணைந்து பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலமாக இதனை அறிவித்தது.
இங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு உற்பத்தி வரி, விற்பனை வரி, வருமான வரி உள்பட பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வரி அலுவலகமும் அங்கு செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஜப்பான் நாட்டின் முதலிட்டாளர்கள் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் குழுவின் தலைவர் ஹிரோயகி தக்கயமா கூறுகையில், இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. இந்த பகுதியில் செழுமையான மனித வளம் உள்ளது. மேலும் அருகில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் உற்பத்தி பொருட்களை வேறு நாடுகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல வசதியும் உள்ளது என்று அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications