நாங்குநேரி தொழில்நுட்ப மண்டலத்திற்கு வந்த ஜப்பான் முதலீட்டாளர்கள்
நெல்லை: நாங்குநேரியில் உள்ள பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஜப்பான் நாட்டின் முதலிட்டாளர்கள் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டததில் நாங்குநேரி சிறப்பு தொழில் நுட்ப மண்டலத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 1998ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக சுமார் 3500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் அப்போதைய தொழில் துறை அமைச்சர் முரசோலி மாறன் இப்பகுதியை தடையில்லா வர்த்தக மணடலமாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து மத்திய அரசு இதனை 31.3.2001ஆம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் இணைந்து பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலமாக இதனை அறிவித்தது.
இங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு உற்பத்தி வரி, விற்பனை வரி, வருமான வரி உள்பட பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வரி அலுவலகமும் அங்கு செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஜப்பான் நாட்டின் முதலிட்டாளர்கள் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் குழுவின் தலைவர் ஹிரோயகி தக்கயமா கூறுகையில், இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. இந்த பகுதியில் செழுமையான மனித வளம் உள்ளது. மேலும் அருகில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் உற்பத்தி பொருட்களை வேறு நாடுகளுக்கு உடனடியாக கொண்டு செல்ல வசதியும் உள்ளது என்று அவர் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications