For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏன் இந்த வேலை?.. படைப்பாளிகள் மீது லீனா மணிமேகலை பாய்ச்சல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமக்கு எதிராக எழுத்தாளர் ப்ரேம் உட்பட படைப்பாளிகள் வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து எழுத்தாளர் லீனா மணிமேகலை விளக்கம் அளித்துள்ளார்.

லீனா மணிமேகலையின் சர்ச்சைக்குரிய கவிதை ஒன்றுக்கு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிஞர் பழனிவேள் விமர்சனம் ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கு லீனா மணிமேகலை பதிலளித்திருந்தார்.

இந்த விவாதத்தில் எழுத்தாளர் ப்ரேமும் சில கருத்துகளை முன்வைத்திருந்தார். இதற்கு லீனா எழுதியிருந்த கடுமையான விமர்சனம் பிரச்சனையாகிவிட்டது. இதற்கு எதிர்வினையாக அவதூறுகளின் விரல் பற்றி ஒளிரும் ஆளுமைகள்: லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.

லீனா மணிமேகலை பதில்...

லீனா மணிமேகலை பதில்...

இந்த அறிக்கை தொடர்பாக லீனா மணிமேகலை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். லீனா மணிமேகலை பதிவு செய்துள்ளதாவது:

ஜெயலலிதாவிற்குப் பிறகு சொன்ன பொய்களையே திரும்ப பேசுவது, அவதூறு வழக்கு போடுவது, தன் "அவை மந்திரிகளை" வைத்து அறிக்கைகள் வெளியிடுவது என ரொம்ப பிசியாக இருப்பது மாலதி மைத்ரி தான்.

பிள்ளையை பலி கொடுப்பதா?

பிள்ளையை பலி கொடுப்பதா?

ப்ரேமும் மாலதி மைத்ரியும் தங்கள் கேவலமான நடத்தையை மறைப்பதற்கு, தங்கள் பிள்ளையை பலி கொடுப்பது கொடூரமான விளையாட்டு.

இழக்க ஒன்றுமில்லை

இழக்க ஒன்றுமில்லை

இது பாண்டிச்சேரியில் இருக்கும் ரமேஷுக்கு தெரியுமா தெரியவில்லை. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. என் மேல் மாலதி கம்பெனி தொடுத்திருக்கும் அவதூறுகளுக்கு நான் கிரிமினல் வழக்கு தொடுத்தால், பிரேமிற்கு தான் இழப்பு.

கடுமையான சாடல்

கடுமையான சாடல்

யப்பா அதிகாரி தேவேந்திர பூபதி, கவிஞர்களோட வறுமையைப் பயன்படுத்தறது பத்தாம பொய் அறிக்கைகள்ல கையெழுத்து போட்டாவது இலக்கியவாதி ஆயிடலாம்னு நினைக்கிறது ரொம்ப தப்புக் கணக்கு! மு.வி.நந்தினின்னு ஒரு பத்திரிக்கையாளர். இதுக்கு முன்னாடி கூட சூரியக்கதிர் ன்னு ஒரு பத்திரிக்கைக்கு வம்படியா குட்டி ரேவதியையும் என்னையும் வச்சு சர்ச்சை பண்ணாங்க. இவங்க இப்ப ஒரு இணைய இதழ் நடத்தறாங்களாம். அந்த இதழில் முகநூலில் நடக்கிற உரையாடல்களை சம்மந்தப்பட்டவங்க யார் கிட்டயும் கலந்துக்காம, தலையும் இல்லாம வாலும் இல்லாம காபி-பேஸ்ட் பண்ணி ஒட்டி இதழியல் பண்ணுவாங்களாம். இதெல்லாம் ஒரு பொழப்பு. இந்தம்மா நடத்தற மஞ்சள் பத்திரிகை லிங்க் தான் இந்த அறிக்கைக்கு சாட்சி. Puppy Shame!

யாரையுமே தெரியலையே...

யாரையுமே தெரியலையே...

மாலதி மைத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் பத்து பேர் தவிர அறிக்கையில வேற எந்த பெயரும் எனக்கு தெரியல. இதுக்கு முன்னாடி வெளியிட்ட அறிக்கையிலே கேட்காமலேயே போட்டுக்கிட்ட பெயர்களில் கூட சிலர் பொருட்படுத்தறவங்களா இருந்தாங்க. வேலை இருப்பவர்களுக்கு ஒரு வேலை. இல்லாதவர்களுக்கு பல வேலைகள். காட்டறது தான் காட்டறீங்க, பயப்படற மாதிரி பூச்சாண்டி காட்டுங்க மக்களே!

வெட்கம் கெட்ட வேலை..

வெட்கம் கெட்ட வேலை..

Update: அறிக்கையில் பெயர் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த இரண்டு பேரை விசாரித்ததில், தாமிராவிற்கு அறிக்கை குறித்த கேள்வி ஞானம் கூட இல்லை, மதியழகன் சுப்பையா அறிக்கை குறித்து இப்பொது தான் விசாரிக்க கிளம்பியிருக்கிறார். மாலதி மைத்ரி - உங்களுக்கு ஏன் இந்த வெட்கம் கெட்ட வேலை?

English summary
Poet Leena Manimegalai slammed Activists who condemned her facebook post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X