தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள்... - நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'ஆட்சி செயற்பாட்டு வரைவு' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்டார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சீமான், "தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்," என்றார்.

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், கிராமங்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள்; இதனால் நகரம் பிதுங்கிவழிகிறது; உயிரைச் சுமந்துசெல்லும் அவசர ஊர்திகூட சரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை; இதனால் நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவை பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு அமைந்தால் தலைநகரை மாற்றி அமைக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
314 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், 49 உத்தேசத் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில...
பசுமைப் பத்தாண்டு
பத்தாண்டுப் பசுமைத் திட்டம் என சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை பற்றியும் சணல்நார்ச் செடி என தனியாகவும் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பற்றிய கவிதை ஒன்றும் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பொறியாளர்
தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தூய்மைப் பொறியாளர் எனக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை, ‘ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும் என்கிறது.
வனக் காவலர் வீரப்பன்
சந்தனக் கடத்தல் வீரப்பனை ‘தமிழர்களின் வனக் காவலர்' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 'ஐயா வீரப்பனாருக்கு நினைவகம் கட்டப்படும்'.
‘இன விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம்செய்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூஃப், வீரத் தமிழன் முத்துக்குமார், மூன்று அண்ணன்மார்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காக்க தன்னுயிரை ஈகம்செய்த வீரத்தங்கை செங்கொடிக்கு தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications