"100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்".. நெடுவாசல் மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது!
சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது.
22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர். ஜல்லிக்கட்டுக்காக வீரத்துடன் போராடியது போலவே விவசாயிகள், கிராமத்தினரின் இந்தப் போராட்டமும் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று நடந்தது.
கடைசியில் பொன். ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் போராட்டத்தைக் கலைத்தது மத்திய அரசு. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்குழுவினரை சந்தித்து மார்ச் 9ம் தேதி பேச்சு நடத்தினார். அப்போது மக்கள் விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்காது என்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

100 மடங்கு வேகத்துடன்
அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் மக்கள் அறிவித்தனர். அதேசமயம், எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்றாவிட்டால் 100 மடங்கு வேகத்துடன் போராட்டம் மீண்டும் தொடங்கும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

மக்களை மதிக்காத பாஜக
இதோ மக்கள் எச்சரிக்கையை புறம் தள்ளி விட்டது மத்திய அரசு. திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இந்த ஒப்பபந்தத்தில் நெடுவாசலும் அடங்கியுள்ளது.

வாய்ப் பேச்சு வீரர் பொன். ராதாகிருஷ்ணன்
இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை, ஒப்பந்தம் மட்டுமே கையெழுத்தாகிறது. ஆனால் திட்டம் வராது என்று கூறுகிறார் பொன். ராதாகிருஷ்ணன். இது அவருக்கே காமெடியாகத் தெரியவில்லையா என்று மக்கள் கேட்கிறார்கள். ஒப்பந்தம் கையெழுத்தா பின்னர் ஒப்பந்தம் போட்டவர்கள் சும்மாவா இருப்பார்கள்.

மாற்றிப் பேச மாட்டார்களா
வேலையில் இறங்க முனைய மாட்டார்களா.. தடை வந்தால் சட்ட உதவிகளை நாட மாட்டார்களா.. அப்போது இதே அமைச்சர்கள், பாஜகவினரின் வாய்கள், சட்டத்தை நாம் மீற முடியாது, இந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வர சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை இந்த பாஜக அரசு நிச்சயம் செய்யும் என்று சொல்ல மாட்டார்களா என்று மக்கள் கேட்கிறார்கள்.

இதை விட கேவலப்படுத்த முடியாது
ஒரு மக்கள் போராட்டம் நடந்துள்ளது. இது எங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் கூறி விட்டார்கள். அதை பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மக்கள் விரும்பாத திட்டம் வராது என்று கூறி விட்டார். பிறகு எதற்கு இப்போது ஒப்பந்தம் என்று மீண்டும் கிளம்பியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் செயல் என பச்சையாக தெரிகிறது. இதை விட மக்களை கேவப்படுத்த முடியாது என்பதற்கு பாஜகவினரின் இந்த ஒரு செயலே மிகச் சிறந்த உதாரணமாகும்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications