முனிசிபாலிட்டி சேர்மன், 3 முறை முதல்வர், இன்று துணை முதல்வர்... ஓ.பி.எஸ்ஸின் தொடரும் பயணம்!
அதிமுகவின் நகர்மன்றத் தலைவராக தனது பயணத்தைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்வராகி இன்று தர்மயுத்தத்தின் மூலம் துணை முதல்வராகியிருக்கிறார்.
சென்னை : பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் இடையில் 3 முறை ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டு, அவரது மரணத்திற்குப் பிறகு தர்மயுத்தம் தொடங்கி இன்று துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார்.
1996- 2001 தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக செயல்பட்டார்.
2001 : சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து போட்டியில் வெற்றி பெற்றார்.
மே 19, 2001 - செப்டம்பர் 1, 2001: வருவாய்த்துறை அமைச்சராக செயல்பட்டார்.
செப்டம்பர் 21, 2001 - மார்ச் 1, 2002: முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார். (டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வராக தொடரை
முடியாததால் ஓ.பிஎஸ்க்கு வாய்ப்பு)
மார்ச் 2, 2002 - டிசம்பர் 2006: பொதுப்பணித்துறை அமைச்சர்
2006: சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் வெற்றி
2006 - 2010: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக செயல்பட்டார்
2011: போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி
மே 16, 2011: நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக செயல்பட்டார்
செப்டம்பர் 27, 2014: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக செயல்பட்டார்.
மே 22, 2012: ஜெயலலிதா விடுதலையானதால் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
2016: போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக வெற்றி
மே 16, 2016: நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக செயல்பட்டார்
டிசம்பர் 5,2016: ஜெயலலிதா உயிரிழந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நள்ளிரவில் பதவியேற்பு
பிப்ரவரி 5, 2017: சசிகலா குடும்பத்தினரின் வற்புறுத்தலால் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்
ஆகஸ்ட் 21, 2017: துணை முதல்வராக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசில் பதவியேற்பு