மாணவர்களே போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்.. ஆர்.ஜே.பாலாஜி
சென்னை: மாணவர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நமது போராட்டத்தை மதித்து அரசு உடனே சட்டம் கொண்டு வந்தது. இதுவே நமக்கு வெற்றிதான். வன்முறையில் ஈடுபடுவது கேவலமான செயல். யாரோ நம்மை பொறுக்கி என்று சொன்னபோது நமக்கு கோபம் வந்தது. அதை நிரூபிப்பது போல நடந்துகொள்ள வேண்டாம். நமது போராட்டம் வென்றுவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொள்வோம். எல்லோரும் வீட்டுக்கு திரும்புங்கள். இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆனால் பாலாஜியின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேரடியாக மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை பாலாஜி உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
The protest is over.Plz stop this. pic.twitter.com/VlPX5dpy9m
— RJ Balaji (@RJ_Balaji) January 23, 2017
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் அறவழி போராட்டத்திலிருந்து இளைஞர்கள் பின்வாங்க கூடாது என கோரிக்கைவிடுத்துள்ளார்.