எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.25 கோடி அபராதமா? இலங்கை அச்சுறுத்தலை அனுமதிக்கக் கூடாது; ராமதாஸ்
சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளுக்கு கோடிக் கணக்கில் தண்டம் விதிப்போம் என்று இலங்கை அரசு அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை ரூபாய் 25 கோடி அபராதம் விதிக்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கை தான் என்பதில் சந்தேகமில்லை.
நான் ஏற்கனவே கூறியவாறு, உலக அளவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி பார்த்தால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக குற்றஞ்சாட்டுவதே அபத்தம் ஆகும். குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும் எல்லைகளால் பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளுக்கு கோடிக்கணக்கில் தண்டம் விதிப்போம் என அச்சுறுத்துவது அந்நாட்டு ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிர் பீறிடுவதையே காட்டுகிறது. இதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது.
நிலைமை இப்போது மோசமடைந்துள்ள நிலையிலாவது முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக கோடநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்ப வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நமது நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும்; அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications