சென்னையில் 250 செ.மீ. மழை கொட்டுமா? நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்தி
சென்னை: தமிழகத்தை நவம்பர் 22ம் தேதி மிகப்பெரிய புயல் தாக்கும் என்று பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்து வாட்ஸ் அப்பில் தகவல் பரவிய நிலையில், சென்னையில் நவம்பர் 21 அல்லது 22 ஆம் தேதி 250 செமீ அளவுக்கு மழை பெய்யும் என்று நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் அதிர்ச்சி தகவலை பரப்பி வருகின்றனர். இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இது வெறும் வதந்திதான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் வாட்ஸ்அப் செயலிக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், சென்னையில் 21 அல்லது 22 ஆம் தேதி கடும்புயல் வீசும். மேலும் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 250 செ.மீ மழை கொட்டித்தீர்க்கும். மேலும், மத்திய அரசு சார்பில் 3000 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் முப்படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாசா-வின் முன்னெச்சரிக்கை எப்போதும் தவறானது இல்லை என்றும் இந்தியாவின் சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சி இச்செய்தியை நேரலையாக ஒளிபரப்பி வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், சென்னையில் வரும் நாள்களில் லேசான மழை பெய்யலாம் என்றும், மேலும், சி.என்.என்.-ஐ.பி.என் தொலைகாட்சியும் நாசா-வின் எச்சரிக்கை குறித்த எவ்வித செய்தியையும் ஒளிபரப்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாசா-வின் எச்சரிக்கை செய்தி கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, ஹெலன் புயல் வீசியபோது விடுக்கப்பட்டது என சில இணையதள செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
35 செ.மீ மழைக்கே சென்னையும் புறநகர் பகுதிகளும் மூழ்கிவிட்டன. ஆனால் 250 செ.மீ மழை பெய்தால் என்னவாகும் சென்னை என்று நினைத்து பலரும் அச்சமடைந்துள்ளனர். மழை, வெள்ளத்தால் சென்னை வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய விஷம செய்திகளை பரப்புவர்கள் மீது சைபர் க்ரைம் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications