For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமாபுரம் எம்ஜிஆர் வீட்டில் சசிகலா மரியாதை... கண்களை மூடி தியானம் வேறு

ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் சசிகலா கறை படியாத கை என போற்றப்படும் எம்ஜிஆர் வீட்டிற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் குற்றவாளி சசிகலா கறை படியாத கை எனப் போற்றப்படும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது வீட்டின் தரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.

Sasikala paid tribute to the former Chief minister MGR in his Ramapuram Home

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் பெங்களூரு சிறையில் சரணடைய போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து புறப்பட்டனர். முதலில் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அடித்து சபதம் செய்த சசிகலா பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமாபுரம் சென்றார்.

Sasikala paid tribute to the former Chief minister MGR in his Ramapuram Home

அங்குள்ள எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்ற சசிகலா அங்கிருந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவன தலைவரும்ன எம்ஜிஆரின் படத்தை தொட்டு வணங்கினார். பின்னர் ஓபிஎஸ் பாணியில் தரையில் அமர்ந்து கண்களை மூடி சசிகலா தியானம் மேற்கொண்டார்.

Sasikala paid tribute to the former Chief minister MGR in his Ramapuram Home

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு தண்டனையை அனுபவிக்க செல்லும் சசிகலா எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Guilty Sasikala paid tribute to the former Chief minister MGR in his Ramapuram Home. She did meditation also before going to prison for asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X