For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Sri Lankan Navy arrests four tamil fishermen

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆனநிலையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
4 Tamil fishermen, arrested near Neduntheevu by Srilankan navy on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X