தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றி வரும் சீன கவிஞர் யூசிக்கு முது முனைவர் பட்டம்
சென்னை: அவ்வையாரின் ஆத்திசூடியை சீன மொழியில் மொழிபெயர்த்த சீன கவிஞர் யூசிக்கு முதுமுனைவர் பட்டம் வழங்க தமிழ் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தைவான் நாட்டை சேர்ந்த தலைசிறந்த கவிஞர் யூசி. இவர் உலகில் அதிகமானவர்கள் பேசும் மொழியான சீன மொழியான மாண்டரின் மொழியில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை சீன மொழியில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் புகழை உலகமெல்லாம் பரவச் செய்தார்.

அவ்வையாரின் ஆத்திசூடியை முழுமையாக படித்து அதன் விழுமிய கருத்துகளை நாக்கு உணர்ந்து நுட்பமாகவும், திடமாகவும் உள் வாங்கிக் கொண்டு 2 மணி நேரத்தில் மிகச் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுவரை இதுபோன்ற படைப்புகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்ய எவருமே முன்வராத நிலையில், கவிஞர் யூசியின் பணி சிறப்பு வாய்ந்தது ஆகும்.
கவிஞர் யூசி தற்போது, தைவான் நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் ஆசிரியராக பதவி வகிக்கிறார். அந்நாட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்.
அவரது சிறப்பான பணியை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, ரூ.1 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மொழியாக்கப் பணிக்காக இவருக்கு தமிழக அரசு ரூ.18 லட்சம் மதிப்பூதியம் வழங்கியது. அந்த தொகையை தானே வைத்துக் கொள்ளாமல், தமிழ்ப் பல்கலைக்கழகம், உலக தமிழ்ச் சங்கம், உலக தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு தலா ரூ.6 லட்சத்தை வழங்கியுள்ளார். மேலும், தைவான் நாட்டின் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டின்போது தன் சொந்த செலவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான திருவள்ளுவர் சிலையை அங்குள்ள மலையின் உச்சியில் நிறுவியுள்ளார். இவரது செயல் தமிழுக்கும், திருவள்ளுவருக்கும், பெருமை சேர்த்துள்ளது.
இந்தநிலையில், நேற்று நடந்த தமிழ் பல்கலைக்கழத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், தமிழ் மொழிக்காக அளப்பரிய பணிகளை செய்து வரும் கவிஞர் யூசிக்கு, ‘முது முனைவர்' பட்டத்தை வழங்கி சிறப்பிக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications