பிக் எஃப் எம் ரேடியோ ஜாக்கியானார் விஜய் டிவி ரம்யா
சென்னை: பிரபலமான சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா தற்போது ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ளார். பிக் பிப்டி பிப்டி என்ற நிகழ்ச்சியை நேரடியாக நடத்தும் அவர் வாசகர்களுடன் உரையாடுகிறார்.
விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் ரம்யா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்திருந்தார்.
VJ to RJ avatar !!Everyday 4-6pm on my show BIG 50-50 @927BIGFM what's app 9025927927 or call 39890927 2 talk with me pic.twitter.com/Kgivptksdz
— Ramya Subramanian (@ramyavj) August 24, 2015
திருமணத்திற்குப் பின்னர் ரம்யா சினிமாவில் நடிக்க வந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் திடீரென பிக் எஃப் எம் நிகழ்ச்சியின் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கிவிட்டார். தினசரி மாலை 4 மணி முதல் 6 மணிவரை ரம்யா உடன் உரையாடலாம்.
எனக்கு இது புதிய அனுபவம்... கொஞ்ச நாளைக்கு தப்பும் தவறுமாகத்தான் இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள், என்னுடன் பேசுங்கள் மகிழ்ந்திருங்கள் என்று தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் ரம்யா.
எத்தனையோ ரேடியோ ஜாக்கிகள், வீடியோ ஜாக்கிகளாக வலம் வருகின்றனர். டிவி சீரியல்களில் நடிக்கின்றனர். ஆனால் பிரபல வீடியோ ஜாக்கியாகவும், நடிகையாகவும், சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த ரம்யா திடீரென ரேடியோ ஜாக்கியாக மாறியதன் காரணம் என்னவென்று புரியமல் தவிக்கின்றனர் அவரது அபிமானிகள்.