பிரிட்டன் பெண் எழுத்தாளருக்கு நோபல்
ஸ்டாக்ஹோம்:
இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இப்பரிசை இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங் பெற்றுள்ளார்.
இவரது இயற்பெயர் டோரிஸ் மே டெய்லர். 1919ம் ஆண்டு ஈரானில் பிறந்தவர் டெய்லர். பின்னர் அவரது குடும்பம் ஜிம்பாப்வேக்கு இடம் பெயர்ந்தது. 1925ம் ஆண்டு டெய்லர் தனது முறையான படிப்பை 13 வயதில் முடித்தார்.
88வயதாகும் லெஸ்ஸிங் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெறும் அதிக வயதானவர் என்ற பெருமையையும் லெஸ்ஸிங் பெறுகிறார். தி கம்யூனிஸ்ட் தீம், தி சைக்காலாஜிக்கல் தீம் மற்றும் தி சுஃபி தீம் என்ற மூன்று நூல்களுக்காக லெஸ்ஸிங்குக்கு நோபல் கிடைத்துள்ளது.
தி கிராஸ் இஸ் சிங்கிங் என்ற நாவல்தான் லெஸ்ஸிங்கின் முதல் எழுத்தாகும். இது 1950ம் ஆண்டு வெளியானது. 1985ம் ஆண்டு இவர் எழுதிய தி குட் டெரரிஸ்ட் என்ற நாவலுக்கு புக்கர் விருது கிடைத்தது. 1995ம் ஆண்டு எல்.ஏ.டி. புக் விருதைப் பெற்றார்.
நோபல் பரிசைப் பெறும் லெஸ்ஸிங்குக்கு ரூ. 6.08 கோடி பரிசாகக் கிடைக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications