கருணாநிதிக்கு உலக திருக்குறள் பேரவை சார்பி்ல திருக்குறள் பேரொளி பட்டம்
சென்னை: உலக திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி என்ற பட்டம் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது. உலக பொதுமறை திருக்குறளுக்கு எழுத்துப்பணி, சொற்பணி, செயல்வடிவம் அளித்தவர்கள் உண்டு. எழுத்து, சொல், செயல் என்று ஒருங்கிணைத்து திருக்குறள் பணியாற்றுபவர் முதல்வர் கருணாநிதி.
சென்னையில் வள்ளுவர்கோட்டம், கன்னியாகுமாரியில் திருவருவச்சிலை, பெங்களுரில் 18 ஆண்டுகளாக கோணிப்பையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது, 1330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பொற்கிழி விருது, குறளோவியம், திரு வள்ளுவர் ஆண்டை தமிழ்புத்தாண்டாக அறிவித்தது என்பது உட்பட பல்வேறு பணியாற்றியுள்ளார்.
திருக்குறள் பணியில் வாழ்நாள் சாதனையாளராக விளங்கிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு இப் பேரவை சார்பில் வரும் 10ம் தேதியன்று, சென்னையில் 'திருக்குறள் பேரொளி' பட்டம் வழங்கப்பட உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள விழாவில், முதல்வருக்கு திருக்குறள் பேரொளி பட்டத்தை நான் வழங்குகிறேன். முதல்வர் ஏற்புரை வழங்குகிறார்.
உயர்நீதி்மன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார் அடிகளார்.












Click it and Unblock the Notifications