ஜெ. தலைமையில் திருக்குறள் மாநாடு நடத்தும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் திருக்குறள் மாநாட்டை நடத்தப் போவதாக அதிமுக இலக்கிய அணி தீர்மானம் போட்டுள்ளது.
இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் செயலாளர் வைகைச் செல்வன் தலைமையில் நடந்தது.
அதில், ஜெயலலிதாவின், 63வது பிறந்த தினத்தை ஒட்டி, 63 இடங்களில் நூலகங்கள், படிப்பகங்கள், தகவல் பலகைகள் அமைக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகள் அளவில் பேச்சு, கவிதைப் போட்டி நடத்தப்படும். பேச்சாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளுக்கு பயிற்சிமுகாம் நடத்தப்படும்.
இலக்கிய கருத்தரங்கங்கள், திருக்குறள் மாநாடு, ஜெயலலிதா தலைமையில் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications