சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது!
சென்னை: எப்போதும் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு அதிரடி நற்செய்தி வெளியாகியுள்ளது. நகரின் முக்கிய சாலைகளை 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்ய மாநில திட்டக்குழு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை கட்டமைப்பின் முதல் பணிக்குழு கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான், நகரின் மிக முக்கியமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள சாலைகளை அகலப்படுத்த சிவில் முகமைகள் திட்டமிட்டுள்ளன.

எங்கே தொடங்குகிறது இந்த மெகா பிளான்?
முதற்கட்டமாக, சென்னையின் இதயமான கோயம்பேட்டை இணைக்கும் பல்வேறு கிளை சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பாடி மேம்பாலம் (சரவணா ஸ்டோர்ஸ் அருகில்) முதல் திருநின்றவூர் வரையிலான சாலையை வலுப்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, வெளிவட்டச் சாலைக்கும் அண்ணா நகர் போன்ற முக்கியப் பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பு பல மடங்கு மேம்படும். "தற்போதுள்ள சாலையின் அகலம் சுமார் 50% வரை அதிகரிக்கப்படும்," என அதிகாரிகள் தரப்பில் உற்சாகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிஸ்ட்டில் இருக்கும் மற்ற ஹாட் ஸ்பாட்கள்:
கிட்டத்தட்ட பைபாஸ் அறுவை சிகிச்சை போல.. சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் பல கிளை சாலைகள் மொத்தமாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
1. வேளச்சேரி - தாம்பரம் (Velachery - Tambaram Main Road)
தென் சென்னையின் இதயமாகக் கருதப்படும் இந்தச் சாலை, மாநகரத்தையும் புறநகரத்தையும் இணைக்கும் மிக முக்கியமான புள்ளியாகும்.
தற்போதைய நிலை: பள்ளிக்கரணை, மேடவாக்கம், செம்பாக்கம், மற்றும் கிழக்குத் தாம்பரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்தச் சாலையில் பீக் ஹவர்களில் (Peak Hours) வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக மேடவாக்கம் சந்திப்பு மற்றும் ராஜகீழ்ப்பாக்கம் பகுதிகளில் நெரிசல் அதிகம்.
விரிவாக்கத்தின் அவசியம்: தற்போது மேடவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தாலும், சாலையின் மற்ற பகுதிகள் குறுகலாக இருப்பதால் பாட்டிலெக் (Bottleneck) சிக்கல் ஏற்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையிலிருந்து வேளச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் தடையின்றி பயணிக்க முடியும். இது தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும்.
2. வேளச்சேரி - தரமணி (Velachery - Taramani Road)
இந்தச் சாலை சென்னையின் 'ஐடி காரிடார்' (IT Corridor) எனப்படும் ஓ.எம்.ஆர் (OMR) சாலைக்கு ஒரு மாற்றுப் பாதையாகவும், இணைப்பாகவும் செயல்படுகிறது.
தற்போதைய நிலை: தரமணி ரயில் நிலையம் மற்றும் டைடல் பார்க் (TIDEL Park) அருகே உள்ள சந்திப்புகளில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தினமும் பயன்படுத்தும் சாலை இது.
விரிவாக்கத்தின் அவசியம்: தரமணி மற்றும் வேளச்சேரி இடையே உள்ள சாலைப் பகுதிகள் விரிவாக்கப்படுவதால், ராஜீவ் காந்தி சாலையில் ஏற்படும் நெரிசலை இது பெருமளவு குறைக்கும். மேலும், தரமணி வழியாக அடையாறு மற்றும் மத்திய கைலாஷ் செல்வோருக்குப் பயண நேரம் பாதியாகக் குறையும். 50% வரை சாலை அகலப்படுத்தப்பட்டால், பேருந்துகளுக்கென தனி வழித்தடங்கள் அமைப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
3. பம்மல் (Pammal - Pallavaram Region)
சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பம்மல் பகுதி, கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமான குடியிருப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தற்போதைய நிலை: பல்லாவரம் - குன்றத்தூர் பிரதான சாலை (Pammal Main Road) மிகவும் குறுகலானது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், ஒரு பேருந்து நின்றால் கூட பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட தூரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
விரிவாக்கத்தின் அவசியம்: இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால், பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையிலிருந்து குன்றத்தூர் மற்றும் பூந்தமல்லி நோக்கிச் செல்லும் வாகனங்கள் எளிதாகச் செல்ல முடியும். பம்மல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்தால், அது நேரடியாக சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்துச் சுமையையும் குறைக்கும்.
தமிழக அரசின் இந்த மெகா பிளான் மட்டும் கச்சிதமாக நிறைவேறினால், சென்னை சாலைகளில் "கார்"களும் "பைக்"களும் ஆமை வேகத்தில் நகர்வது இனி பழைய கதையாகிவிடும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications