தங்கக் காசு 1 பவுன் தந்தும்.. தமிழகத்துக்கு ரஜினிகாந்த் செய்தது என்ன? பண்ணை வீடும், பகட்டு வாழ்வும்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழக மக்கள் இந்த அளவுக்கு புகழை கொடுத்தும், சமூக அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் குரல் கொடுக்கவில்லையே? நம் மக்கள் துயரத்தில் இருக்கும்போது ரஜினி தலையிடுவதே இல்லையே? தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவியிருக்கிறாரா ரஜினிகாந்த்? என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பேட்டி ஒன்றில் காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்தள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது எதுக்கு? மக்கள் நலனுக்காக அவர் எந்த பங்களிப்பையும் செய்யவில்லையே.

ரூ.500 கோடி மார்க்கெட்
ஒரு படத்துக்கு 500 கோடி ரூபாய் ரஜினிக்கு மார்க்கெட் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், லைட்பாய், வாகனம் ஓட்டுபவர்கள், சாப்பாடு போடுபவர்கள், உதிரி பாகங்களை சுமப்பவர்கள் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளன.
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் எத்தனை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது? கொரோனா காலத்தில் எத்தனை ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் மண்டபம் திறந்து விடப்பட்டது?
சூர்யா குடும்பம் 'ஆகாரம் அறக்கட்டளை' வைத்து ஏழைக் குழந்தைகளை படிக்க வைப்பதைப் போல, ரஜினிகாந்த் பெயரில் ஏதாவது ஒரு இலவச பள்ளிக்கூடம் இருக்கா? அறக்கட்டளை இருக்கா?
ஊருக்கே உதவிய எம்ஜிஆர்
ராமாவரம் தோட்டம் சுடுகாடாக கிடக்கிறது.. லைட் போடக்கூட அங்கே ஆள் இல்லை.. எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி, கண் தெரியாதோர் பள்ளி, ஊனமுற்றோர் பள்ளி என எத்தனை பள்ளிக்கூடங்களை சென்னை முழுவதும் கட்டி வைத்துள்ளார்.. ஆனால், ரஜினி பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை காட்டுங்கள் பார்க்கலாம்.
ஒரு பவுன் தங்கக்காசு
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு.. அதாவது ஒரு சொட்டு வியர்வைக்கு 1 லட்சம் தரும் இந்த மக்களுக்கு, ரஜினி என்ன செய்தார்? சுனாமி, புயல், கொரோனா என எத்தனையோ நடந்து..
கலைஞனுக்கு மக்கள் கோடி கோடியாக கொட்டி தரும்போது, அவர்களை கருணையுடன் பார்க்ககூடாதா? கேளம்பாக்கத்தில் பண்ணை வீடு கட்டியதுதான் மிச்சம்.. கோடிக்கணக்கான பணத்தில் ஸ்டீல்ஃபேக்டரியும் கிளாஸ்ஃபேக்டரியும், கேளம்பாக்கத்துல பண்ணை வீடுகளும் கட்டுவதுதான் சாதனையா?
தமிழ் மக்கள் இவருக்கு இவ்வளவு புகழைக் கொடுத்தும், சமூக அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் குரல் கொடுக்கவில்லையே.. மக்கள் துயரத்தில் இருக்கும்போது ரஜினி தலையிடுவதே இல்லையே..
5 நட்சத்திர ஓட்டல்வாசிகள்
ரஜினி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் வெறும் 5 நட்சத்திர ஓட்டல்வாசிகளாக இருக்கிறார்களே தவிர, அடித்தட்டு மக்கள் சினிமா பார்க்கும் துயரங்களை புரிந்துகொள்வதில்லையே..
அம்பானி வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.. டான்ஸ் ஆடினார்.. ராமர் கோயில் கட்டினாலும் சரி, அம்பானி வீட்டு திருமணம் நடந்தாலும் சரி, ரஜினியை முன்னணியில் உட்கார வைத்துவிடுகிறார்கள். அம்பானி வீட்டுத் திருமணத்தில் ரஜினிக்கு 15 லட்சம் ரூபாய் வாட்ச் பரிசளிக்கப்பட்டதாக சொன்னார்கள்..
அம்பானியை பார்க்கிறாரே தவிர, மறுபுறம் தெருவில் படுத்துக்கிடக்கும் ஏழைகளை பார்க்க மறுக்கிறார்.. இரட்டை நிலை சரியில்லை என்றுதான் சொல்கிறேன்" என்றெல்லாம் பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications