பொதுமக்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க உள்ளதா? பரவும் தகவல் உண்மையா?
டெல்லி: பொதுமக்களின் அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க இருப்பதாகவும் இதற்காக புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் சில நிமிடங்களில் மூலை முடுக்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமாக பரவி விடுகிறது. செய்திகள், அரசின் திட்டங்கள் எதுவென்றாலும் மக்களுக்கு உடனடியாக கிடைத்து விடுகிறது என்றாலும் கூடவே பொய்யான தகவல்களும் வதந்திகளும் பரவி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் உண்மை செய்தியை விட வதந்திகள் மிக வேகமாக பரவுகிறது. இதனால் மக்களுக்கு தேவையற்ற குழப்பங்களும் அச்சமும் ஏற்படுகிறது.

அந்த வகையில், தான் வாட்ஸ் அப்பில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, பொதுமக்களின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க இருப்பதாகவும் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் வாட்ஸ் அப் டிரிபிள் டிக் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த செய்தி வாட்ஸ் அப் பார்வேடு மெசேஜ்களில் வேகமாக பரவியது. இதனால் மக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், மத்திய அரசின் பிஐபி டிவிட்டர் பக்கதில் இது குறித்த உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஐபி பேக்ட் செக் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய அரசு இதுபோன்ற எந்த ஒரு விதியையும் அமல்படுத்தவில்லை. அரசு அதிகாரிகள் வட்டாரங்களும் பல்வேறு செய்திகளும் இதை உறுதி படுத்தியுள்ளன.
தனிநபர்களின் செல்போன் அழைப்புகளையும் சமூக வலைத்தள செயல்பாடுகளையும் அரசு கண்காணிக்கும் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பில் பரவும் இத்தகைய முற்றிலும் தவறானது என்பது தெரியவந்துள்ளது. ஆகவே, இதுபோன்ற மெசேஜ்களுடன் வரும் தகவலை யாருக்கும் ஷேர் செய்யாமல் இருப்பதை தவிர்ப்பதால் தேவையற்ற அச்சத்தை தவிர்க்க முடியும்.

Fact Check
வெளியான செய்தி
பொதுமக்களின் சமூகவலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் தகவல்கள் பரவின.
முடிவு
இது போன்ற எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. பொதுமக்களின் தனிப்பட்ட அழைப்புகளையும் சமூக வலைத்தள செயல்பாடுகளையும் கண்காணிக்க இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது ஆகும்.
ரேட்டிங்
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications