புளியாரைக்கீரை.. வள்ளலார் சொன்னது இதைதான்.. புளியாரை இலை சாறு போதும்.. ஆயுசு நீளும்.. அற்புத புளியாரை
சென்னை: கீரைகள் என்றாலே நமக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், எத்தனையோ பலன்தரத்தக்க கீரைகளை, அன்றாட வாழ்வில் தவிர்த்து விடுகிறோம். அப்படிப்பட்ட அருமருந்தாகும் கீரைதான் புளியாரைக்கீரை.
இது ஒரு குளிர்ச்சிக்கீரை. மெல்லிய தண்டு பகுதியை கொண்டது.. தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்று, அன்றே சொன்னார் வள்ளலார்.

கீரை மசியல்: உடல் வெப்பத்தை போக்கக்கூடியது. அளவுக்கு அதிகமான சூட்டால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மூலநோய் பாதிக்கப்பட்டவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள், சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கீரையை மிஸ் பண்ணவே கூடாது.
வயிற்றுக்குள் உணவாகவும், சருமத்துக்கு மருந்தாகவும் இந்த இலையை பயன்படுத்திக் கொள்ளலாம்... இந்த கீரையை மற்ற கீரைகளை போலவே, மசியலாகவோ, துவையல் அரைத்தோ சாப்பிடலாம். பாசிபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.. அதேபோல, இந்த புளியாரை கீரையுடன் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் உட்பட பல கோளாறுகள் நீங்கும்..
மூலநோய்: இந்த கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டால், மூலநோய் ஓடியே போய்விடும்.. அல்லது புளியாரைக் கீரையை, பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதுடன், பசியும் நன்றாக எடுக்கும்.
அடிக்கடி சமையலில் இந்த கீரையை சேர்த்து கொள்வதால், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்.. பித்த மயக்கம் நீங்கும்.. மூலநோய்ப் பாதிப்புகள் அகலும்... வெறும் இலைகளை மட்டுமே பறித்து, சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், காய்ச்சல் குணமாகும்.. அல்லது இந்த கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டாலும் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும் என்கிறார்கள்..
கண் நோய்கள்: இந்த தண்ணீரில் கண்களை கழுவினால், கண் நோய்கள் நீங்கும்.. கண் பார்வை கூர்மைப்படும். இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், பல், ஈறுகள் வலுவடையும்.. வாய்ப்புண்கள் குணமாகும்..
இந்த இலையில் சிலர் டீ போட்டு குடிப்பார்கள்.. ஒரு பாத்திரத்தில், தண்ணீர் வைத்து, ஒரு கொத்து இலைகளையும் கொட்டி, நன்றாக காய்ச்சி வடிகட்டி, அத்துடன், தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள்.
சரும அலர்ஜி: சருமத்தில் அலர்ஜி இருந்தாலோ அல்லது மருக்கள் இருந்தாலோ, புளியாரை இலையில் சாறு எடுத்து, அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து பற்றுபோல போட்டு வந்தால் மருக்கள், பருக்கள் உடைந்துவிடும். அல்லது வெறும் இலைச்சாற்றை பருக்கள், கொப்பளங்கள் மீது தடவி வந்தாலும் தீர்வு கிடைக்கும்.
உடலில் எங்காவது அடிபட்டுவிட்டால், அல்லது வீக்கம் நிறைந்து காணப்பட்டால், இந்த புளியாரை இலையின் சாறுகளை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.. இந்த இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து முகத்தில் மசாஜ் போல செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதுடன், தோல் சுருக்கமும் நீங்கும்.. முகமும் பொலிவு பெறும்..
இலைகள்: தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இந்த கீரை அருமருந்தாகிறது.. தூங்குவற்கு முன்பு, இந்த இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் நன்றாக தூக்கம் வருமாம்.
இந்த கீரையுடன் சிறிது வேப்பங்கொழுந்து, நான்கைந்து மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து வெறும்வயிற்றில் சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்குமாம்.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
அதேபோல, புளியாரைகீரையில் சாறு எடுத்து, அதில், சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டால், மொத்த பித்த நோய்களும் குணமாகுமாம்.. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே, மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications