உங்கள் தொப்புளில் பஞ்சு பஞ்சாக உருளையாக அழுக்கு வெளியேறுகிறதா? என்ன காரணம்?
சென்னை: உங்கள் தொப்புளில் அவ்வப்போது பஞ்சு போன்று உருளையாக ஒரு கழிவு உள்ளே உருவாகின்றனவா? இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த அழுக்கு படியாமல் இருக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அதையும் தெரிந்து கொண்டால் சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.
இந்த அழுக்கை ஆங்கிலத்தில் belly button lint என்பார்கள். இது போன்ற பஞ்சு போன்ற அழுக்கு எடை அதிகரித்தவர்களுக்கு அதிகமாக இருக்க காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

பொதுவாக உடம்பில் இருந்து வெளியாகும் கழிவுகளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. காதில் இருந்து வந்தால் அதன் பெயர் மெழுகு. மூக்கில் இருந்து வந்தால் அதன் பெயர் குறுணி. கண்களில் இருந்து வந்தால் அதன் பெயர் ஊளை. இவ்வாறு பல பெயர்கள் உள்ளன.
வயிற்றில் இருந்து பஞ்சு போன்ற அழுக்கு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் இது நடுத்தர வயதுள்ள ஆண்களுக்கும் தொப்புளை சுற்றி முடி உள்ளவர்களுக்கும் இது வரும் என ஆய்வுகள் மூலம் தெரிகிறது. இந்த ஆய்வை எடுத்து தன்னார்வலர்கள் சிலரிடம் தொப்புளை சுற்றியுள்ள முடியை அகற்றுமாறு ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இவ்வாறு முடியை அகற்றுவதன் மூலம் பஞ்சு போன்ற கழிவுகள் சேர்வதை தடுக்கும் என நிரூபணம் ஆனது. தொப்புளைச் சுற்றியுள்ள முடியானது, நாம் அணியும் ஆடையின் உள்புறம் இருந்து சிறிய நார் இழைகளை இழுத்து தொப்புளில் சேர்க்கிறது. இவ்வாறு அவ்வப்போது இழைகள் தொப்புளில் சேகரிக்கப்படுவதால் அவரை நிரம்பி ஒரு கட்டத்தில் உருளையாக வெளியே வருகிறது.
இவ்வாறு தொப்புளில் இருந்து 503 பஞ்சு போன்ற கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் ஒவ்வொன்றும் ஒரு கிராம் அளவுக்கு கூட எடை இல்லாமல் இருந்தது. ஒவ்வொன்றும் 1.82 மில்லிகிராம் எடை கொண்டது ஆகும். 7.2 மில்லி கிராமுக்கு மேல் எடையும் இருந்தது. அவற்றில் மிகப் பெரியது 9.17 மில்லிகிராம் கொண்டது.
சட்டையின் நிறத்தில்தான் அந்த பஞ்சு கழிவுகளும் இருந்தது. பழைய சட்டைகளை அணிந்தால் அந்த பஞ்சு போன்ற அழுக்கு உருவாவது குறைவாக இருந்தது. புதிய ஆடைகளில்தான் நிறைய அழுக்கு உருவானது. தொப்புளை சுற்றியுள்ள முடிகளின் முனைகளில் ஒருவித கொக்கிகள் இருக்கும். அவற்றின் மூலம் துணிகளின் நார்களை உள்ளே உறிஞ்சப்படுகின்றன.
இந்த பஞ்சு போன்ற அழுக்கு துணிகளின் நார்களால் மட்டுமல்லாமல் கொழுப்பு, வியர்வை, இறந்த செல்கள், தூசிகளால் ஆனது என்றும் கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பார்கர், என்பவர் 1984 ஆம் ஆண்டு முதல் தனது தொப்புள் பஞ்சுகளை பக்குவமாக சேகரித்து கண்ணாடி ஜார்களில் அடைத்து பாதுகாத்து வருகிறார். அதிக பஞ்சுகளை சேகரித்ததாக அவருக்கு 2010ஆம் ஆண்டு கின்னஸ் சாதனையில் பட்டம் கொடுக்கப்பட்டது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications