கேன்சர் முதல் சர்க்கரை நோய் வரை! சொடக்கு போடும் நேரத்தில் விரட்டும் சொடக்கு தக்காளி! விலை என்ன?
சென்னை: புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்தும் சொடக்கு போடும் நேரத்தில் பஞ்சாய் பறக்க வைக்கும் சொடக்கு தக்காளி குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ராஜா ஹனி என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சொடக்கு தக்காளி மருத்துவ பயன்களை பார்க்கலாம். சொடக்கு தக்காளி, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பழம். இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. சொடக்கு தக்காளியின் சில முக்கிய மருத்துவ பயன்கள் இங்கே:

புற்றுநோய்க்கு மருந்து
சொடக்கு தக்காளி புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
சர்க்கரை நோய்க்கு நல்லது
சர்க்கரை நோயாளிகளுக்கு சொடக்கு தக்காளி மிகவும் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
வலி நிவாரணி
சொடக்கு தக்காளி வலி நிவாரணியாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவுகிறது.
கட்டிகளை குணப்படுத்தும்
உடலில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த சொடக்கு தக்காளி உதவுகிறது.
சிறுநீர் பெருக்கி
சொடக்கு தக்காளி சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது
சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிக அளவில் உள்ளது. இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தி
சொடக்கு தக்காளி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நரம்பு மண்டல ஆரோக்கியம்
சொடக்கு தக்காளி நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்திற்கு நல்லது
சொடக்கு தக்காளி செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
கண் ஆரோக்கியம்
சொடக்கு தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் உள்ளன. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இவை சொடக்கு தக்காளியின் சில முக்கிய மருத்துவ பயன்கள். மேலும், சொடக்கு தக்காளி இதய ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் பொதுவானவை. உங்கள் உடல் நலத்திற்கு சொடக்கு தக்காளி உதவுமா என்பதை அறிய மருத்துவரை அணுகவும். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சொடக்கு தக்காளிகள் wild tomato, gooseberry weed உள்ளிட்ட பெயர்களில் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. இவை தோட்டங்களிலும் வீட்டை சுற்றிலும் வளர்ந்து கொண்டிருக்கும். இந்த சொடக்கு தக்காளியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் அளவு அதிகரிக்கும். இதனால் எலும்புகள் வலுவடையும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தும்.
சொடக்கு தக்காளியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அது போல் பீட்டா கரோட்டின், வைட்டமின் கே உள்ளது. உடல் வலி, மூட்டு வலி உள்ளவர்கள், நீரில் சொடக்கு தக்காளி இலை, காய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து காலை, மாலை என இரு வேளை குடித்து வந்தால் மூட்டு வலியும் உடல் வலியும் தீரும்.
இப்படி எண்ணற்ற பயன்களை கொண்ட இந்த சொடக்கு தக்காளி வெளிநாட்டு சந்தையில் ஒரு கிலோ ரூ 3000 வரை விற்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.












Click it and Unblock the Notifications