குடம்புளி! குடல் பிரச்சினை முதல் உடல் எடையை குறைப்பது வரை! ஆல் கிளியர் செய்யும் மலபார் புளி
சென்னை: குடம்புளி அல்லது கோக்கம்புளி அல்லது மலபார் புளியின் உடல்நல குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். நாம் சமையலில் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக இந்த புளியை பயன்டுத்தலாம்.
தற்போது நாம் பயன்படுத்தி வரும் புளியை சில 100 ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் குடம்புளிதான் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காக செடிகள் உள்ளன.

இந்த புளி பார்ப்பதற்கு பூசணிக்காய் வடிவத்தில் இருக்கும். இது பழமானால் அதை காய வைத்து பயன்படுத்துகிறார்கள். இந்த புளியஞ்செடி கேரளாவில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்கும். இந்த புளி சுவையோடும் துவர்ப்பு சுவையும் இருக்கும்.
குடம்புளி நம் உடல் எடையை குறைக்கிறது. உடல் எடை குறைய விரும்புவர்கள் சிறிய நெல்லிக்காய் அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறிவிட வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிடவும். பிறகு அதை ஆற வைத்து மூன்றாக பிரித்து உணவுக்கு முன்பு மூன்று வேளையும் குடித்து வருகிறார்கள்.
அதிக அளவு வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குடம்புளியால் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணம், அமிலத் தன்மை, இரைப்பை போன்ற பிரச்சினைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அஜீரணக் கோளாறு கொண்டிருப்பவர்கள் குடம்புளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.
குடல் அறிகுறிகளைக் கூட இந்த குடம்புளி கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை தடுக்கும். மலத்தை இளக்கி வெளியேற்றுகிறது. மேலும் வயிற்றுப்போக்கின் அதிர்வெண்ணை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மலச்சிக்கல் இருந்தால் குடம்புளியில் கூழ் செய்து குடித்து வர வேண்டும்.
நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை இந்த குடம்புளிக்கு உண்டு. குடம்புளி சாறு குடிப்பது புற்றுநோயை கூட விரட்டும். கோடை காலங்களில் உடல் சூட்டை தணிக்க இந்த குடம்புளி பானத்தை குடிக்கலாம். குடம்புளியில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. கர்ப்பகாலத்தில் தாய், குழந்தையின் ஊட்டச்சத்துக்கு இவை உதவுகின்றன.
சருமத்தில் வயதான தோற்றத்தை மறைத்து என்றும் இளமையாகவே வைத்துக் கொள்ளும். முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். சொறி, படை அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் குடம்புளி சிறந்தது.
இந்த குடம்புளியை சமையலில் பயன்படுத்த வேண்டும். இது நாம் பயன்படுத்தும் புளியை போல் கரையாது. இதனால் இந்த புளியை நன்கு நிறைய முறை கழுவி வெந்நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications