பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!
சென்னை: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு பயிற்சியை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி லேப்பாரட்டரி அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளாண்ட்) பணிக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக National Apprenticeship Promotion Scheme (NAPS) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்போதே இந்த பயிற்சி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் பயிற்சி காலங்கள் 25 மாதங்களாகும். இந்த பயிற்சியின் போது ரூ 25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்போதே விண்ணப்பங்களை apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். இந்த பணிக்கு மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இந்த பயிற்சி இருக்கும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications