ரயில்வேயில் 11 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆர்ஆர்பி தேர்வு.. எக்சாம் எப்போது நடக்க சான்ஸ்? வெளியான தகவல்
சென்னை: ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 11,000 பணியிடங்களை நிரப்புவதற்காக ஆர்ஆர்பி என்.டி.பிசி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில் தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். இதற்கான அப்டேட்டானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வு வாரியமான ஆர்ஆர்பி என்.டி.பி.சி 11 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட், கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த நிலையில் இதற்கான தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736 பணியிடங்கள்
2. ஸ்டேஷன் மாஸ்டர் - 994
3. சரக்கு ரயில் மேலாளர் - 3,144
4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட் - 1,507
5. சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட் - 732
6. கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் - 2,022
7. கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - 361
8. ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் - 990
9. ரயில்கள் கிளார்க் - 72 என மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி:
கல்வி தகுதி பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். டிகிரி மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். டிகிரி கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதே போன்று 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு 33 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
* Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர்: மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும்.
* ஸ்டேஷன் மாஸ்டர் - மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும்.
* ஜூனியர் கிளர்க் - மாதம் ரூ. 29,200 சம்பளம் வழங்கப்படும்.
* கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - மாதம் 21,700 சம்பளம் வழங்கப்படும்.
* இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.
தேர்வு எப்போது?
இந்த பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அரசு வேலை என்பதால் இளைஞர்கள் பலரும் தீவிரமாக படித்து வருகிறார்கள். தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், எப்போது தேர்வு நடைபெறும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் தான் ரயில்வே தேர்வுக்கான கணினி தேர்வு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் மே அல்லது ஜூன் மாதங்களில் நடைபெறும் என ரயில்வே தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், தேர்வர்கள் தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அவ்வப்போது செக் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications