எஸ்பிஐ பேங்கில் வேலையாம்.. தமிழகத்தில் 470 வேகன்சி இருக்கு.. கரும்பு தின்ன கூலியா?..அப்ளை பண்ணுங்க!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் அப்ரன்டிஸ் பணிக்கான 8500 காலிப்பணியிடங்களுடன் அறிவிக்கை வெளியாகியுள்ளது.
அந்த 8500 இல் 470 காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளன. தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தி மருத்துவ தேர்வும் நடத்தப்படும். இந்தியா முழுவதும் 8500 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான தேர்வு ஜனவரியில் நடத்தலாம் என தெரிகிறது.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை அணுகவும். இந்த அப்ரன்டிஸ் பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற ரூ 300 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இந்த பணிக்கு எவ்வளவு சம்பளம் என குறிப்பிடவில்லை.












Click it and Unblock the Notifications