மதுரை மாநகராட்சியில் ரூ 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. 25 இடங்கள் காலி!
மதுரை: மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு தற்காலிகமாகவே ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவை எந்த காரணத்தை கொண்டு நிரந்தரம் செய்யப்படாது.
10ஆம் வகுப்பு மதிப்பெண், 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். பணியின் பெயர் ஏஎன்எம் மற்றும் புள்ளிவிவர அதிகாரி, மொத்தம் 25 காலிப்பணியிடங்கள்.
இவற்றுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும். விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடம் கடலூர் ஆகும். வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 1 ஆகும்.
கல்வித் தகுதி ஆக்ஸிலரி நர்ஸ் விட்வைஃப் பிஎஸ்சி புள்ளியியல் அல்லது கணிதம். சம்பளம் புள்ளிவிவர அதிகாரிக்கு 20000 ரூபாய் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப்- ரூ 8000 ஆகும். விண்ணப்பங்கள் அனுப்பங்களை மாநகர் நல அலுவலர், மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை- 625002.
விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. மேலும் விவரங்களை http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.