கிராம சுகாதார செவிலியர் வேலை.. 2,147 பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 71 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும் இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டுளது. மருத்துவத் துறையில் காலியாக இருக்க கூடிய கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்து இருந்தார்.

ஸ்டாலின் அறிவித்த நிலையில், சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. இதன்படி துணை செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2,147 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
துணை செலிவியர் / கிராம சுகாதார செவிலியர்- 2,147- பணியிடங்கள்
கல்வி தகுதி:
துணை செவிலியர்/ கிராம சுகாதார செவிலியர் (Auxiliary Nurse Midwife / Village Health Nurse Posts) பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். அதுபோக, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்படும், துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகியவற்றில் 2 ஆண்டு பயிற்சி கல்வியை பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் செவிலியர்களுக்கு நிலை 8 -ன் கீழ் ரூ.19,500 -ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க வயது வரம்பை பொறுத்தவரை பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். SCA/ SC/ ST/ BC / BCM / MBC மற்றும் DNC விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 60% மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 40 சதவிதம் கணக்கிடப்படும் முழுக்க மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வர்க்ள் தேர்வு செய்யப்படுவார்கள். கொரானா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்ரகள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். https://mrb.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்சிஏ/ எஸ்டி மற்றும் டிஏபி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாகும். விண்ணப்பிக்க வரும் 14.12.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mrb.tn.gov.in/notifications.html
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு











Click it and Unblock the Notifications