டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதியவர்களுக்கு குட்நியூஸ்.. ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற அழைப்பு
சென்னை: துணை கலெக்டர் 16, டிஎஸ்பி 23, வணிக வரிகள் உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, தீயணைப்பு அதிகாரி 1 என மொத்தம் 90 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதில், சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, வணிக வரிகள் உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி 1 என மொத்தம் 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. 90 பணியிடங்களுக்கான இந்த முதல் நிலை தேர்வினை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் எழுதியிருந்தார்கள். இந்த தேர்வு முடிவினை 50 நாட்களில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் தற்காலிகமாக 1907 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த 18 மாணவிகள், 31 மாணவர்கள் என 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு தேர்ச்சி பெற்ற 1907 பேரும் தேர்ச்சி அடைந்தவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தி வரும் இ-சேவை மையங்கள் வாயிலாக ஆவணங்களை வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். முதன்மை தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.

இந்த மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். துணை கலெக்டர், டிஎஸ்பி என மதிப்பெண்களை பொறுத்து பணிகள் மாறிக்கொண்டே இருக்கும். மிக அதிகமான மதிப்பெண் எடுத்த 16 பேருக்கு துணை கலெக்டர் பதவியும், அடுத்தாக மிக அதிக மதிப்பெண்ணுடன் உடற்தகுதி தேர்வில் வென்ற 23 பேருக்கு டிஎஸ்பி பதவி கிடைக்கும். வணிக வரிகள் உதவி கமிஷனர் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 21, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, தீயணைப்பு அதிகாரி 1 பணியிடங்களும் மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும்.

இதனிடையே சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற மனிதநேய மையத்தில் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களும் மனிதநேய மையத்தில் முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு பதிவு செய்யலாம். அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்ற மனிதநேய மாணவர்கள் மற்றும் இதர மாணவர்கள் தொலைபேசி மூலமாக 044-24358373, 24330095, 9840439393 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம். மேலும் www.mntfreeias.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்று சைதை துரைசாமி கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications